Monday, December 22, 2014

ஜெபம் prayer

பிசாசும் ஜெபிக்கும் என்று வேதம் சொல்கிறது அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.மாற்கு5:12
நாமும் ஜெபிக்கிறோம் அநேக நேரங்களில் நம்முடைய ஜெபமும் பிசாசின் ஜெபம் போல இருப்பது தான் வேதனை எப்படி என்றால் தன் சொந்த தேவைகளுக்காக என்னை ஆசீர்வதியும் என் குடும்பத்தை ஆசிர்வதியும் என் பிள்ளைகளை ஆசீர்வதியும் வீட்டை தாரும் மனைவியை தாரும் என்று நாம் சுயநலமாகவே ஜெபிக்கிறோம் தேவ பிள்ளைகளே நம்முடைய ஜெபம் எப்படி இருக்கிறது நமக்காக மட்டும் தான் தான் ஜெபிக்கிறோமா அப்படி என்றால் பிசாசின் ஜெபத்திற்கும் நம்முடைய ஜெபத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும் அழிந்து போகின்ற ஆத்துமாக்களுக்காக நாம் ஜெபிக்கின்றோமா நம்மை அறிந்த அநேகர் இன்னும் ரட்சிக்கபடவில்லையே அதற்காக ஆத்தும பாரத்தோட ஜெபிக்கிறோமா?கொஞ்சம் சிந்தித்து பார்ப்போம். என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்.அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சிலநாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி நெகேமியா ஜெபித்தான் என்று வேதம் சொல்கிறது நாம் செய்தி வாசிக்கும் போது கேட்க்கும் போது தேசம் பாவத்தினால் பாழாய் போகும் செய்திகளை கேட்க்கும் பொது வாசிக்கும் போது நம் இருதயத்தில் வேதனை உண்டாகி ஆண்டவரே என்று கதறுகிறோமா.மோசே என்கிற தேவ மனிதன் இப்படியாய் கதறுகிறார் என் பெயரை வேண்டுமானால் ஜீவ புஸ்தகத்தில் இருந்து எடுத்துவிடும் இந்த ஜனங்களை அழிக்காதிரும் என்று கதறினாரே அதை போல் நாம் கதறுகிறோமா பவுல் இப்படியாக சொல்கிறார்  இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச்செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.தன் சொந்த ஜனங்களின் இரட்சிப்பிற்காக நாம் விண்ணப்பம் பண்ணுகிறோமா கொஞ்சம் சிந்தித்து பார்ப்போம் வேதம் சொல்கிறது என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.நம் தேசம் இப்படி ஆசிர்வதிக்க படாமல் இருப்பது அரசியல்வாதிகளால் அல்ல கிறிஸ்தவர்களால் தான் நாம் ஜெபிக்க தவறி விட்டோம் நம் தேசம் ஆசீர்வதிக்கப்பட ரட்சிக்க பட இன்றே திறப்பில் நிற்ப்போம் 

No comments:

Post a Comment